பிரிவு !
நம் அன்பிற்குரியவர்களை நாம் இழக்கும் போது நம் மனம் சொல்லொணாத் துயர் அடைகிறது. மனித வாழ்நாள் என்றோ ஓர் நாள் முடிவடையும் என்ற உண்மையை அறிந்த போதிலும் , நம் மனம் அத்தருணத்தில் அதை ஏற்க மறுக்கிறது.
" மனக்கவலை மாற்றலரிது" என்பது போல் , அவர்களுடனான நம் நினைவுகள் , மீண்டும் மீண்டும் ஓர் இனம் புரியா உணர்ச்சியில் நம்மை ஆழ்த்துகின்றன. காலப்போக்கில் அவை மறைந்தாலும் , அவ்வப்போது ஏதாவது நிகழ்வுகள், காட்சிகள் போன்றவை மூலம் வெளிப்படுகின்றன.
இந்தப் பிரிவின் வலிதான் எவ்வளவு கொடியது? நமக்கு வேண்டப்பட்டவர் தான் என்றில்லை. அது நாம் அறியாத ஒருவராய் இருப்பினும் கூட , இந்தப் பிரிவைக் கேட்க நேர்ந்தால்,இரங்கல் தெரிவிப்பதும் , துக்கம் விசாரிப்பதும் , இறந்தவர் வீட்டில், அவர் உடலுக்கு மலர் மாலை இடுதலும் , மௌன அஞ்சலி செலுத்துவதும் நம் நாட்டு மரபாக உள்ளது.
நம் புராணங்களிலும் ,இலக்கியங்களிலும் கூட இவ்வலியை உணர முடிகிறது. மகாபாரதத்தில் கர்ணன் இறந்த போது , அவன் தாய் அழுகிறாள் . அருகே மற்றொரு பெண் அழுகிறாள். அவளைப் பார்த்து " அம்மா, நான் கர்ணனின் தாய். அவன் பிரிவைத் தாங்காது அழுகிறேன் . நீ யார் , ஏன் அழுகிறாய் ? " என்று வினவினாள். அப்போது அவள் கூறினாள் , " நான் தர்மதேவதை (அறக்கடவுள்) எனக்கென்று , இப்பூவுலகில் ஒரே ஒரு மகனாகக் கர்ணன் இருந்தான் அவனும் இறந்துவிட்டான் . ஆதலால் அழுகிறேன்" . கொடுத்தே (தானம் தந்த கொடை வள்ளல்) சிவந்த கைகள் அல்லவா கர்ணனின் கைகள் ? இனி கர்ணன் போல் ஒருவனைக் காணத்தான் இயலுமோ?
தற்போதும் , தலைவர்கள் , பிரிவுகளுக்கு இரங்கல் செய்தி தெரிவிப்பதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம் . அக்காலத்தில் , புலவர்கள் தம் வலியைப் பாக்கள் மூலம் வெளிப்படுத்தினர் . அதன் பெயர் இரங்கற்பா . இப்போது ஓர் பாடலைக் காண்போம் .
கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். புலவர் மக்களைப் பெரிதும் ஆதரித்தவர் . அவர் புகழைச் சொல்லும் ஒரு பாடல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) நூலில் இடம் பெற்றுள்ளது. அதற்கான குறிப்பைக் கீழே தந்துள்ளேன் (Refer link below). அவர் இறந்த துக்கத்தைத் தாளாமல், இரட்டைப்புலவர்கள் ( ஒருவர் பார்வை இழந்தவர், மற்றொருவர் முடவர் ) இயற்றிய பாடல்.
இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?
விளக்கம் :
இவ்வுலகில் வள்ளல்கள் மிகச்சிலரே . ஆனால் , பொருள் வேண்டும் (யாசிக்கும்) மக்களோ மிக அதிகம் . இவ்வாறிருக்கையில், வள்ளலாகிய நாரணன் உயிரைப் பறித்து விட்டாயே . எமனே, உனக்கு எரிபொருள் ( கரி) வேண்டும் என்பதற்காகக் காட்டில் வீண் மரங்கள் எவ்வளவோ உள்ளன. அதை விடுத்துக் கேட்டவையல்லாம் தரும் கற்பக மரத்தை வெட்டிவிட்டாயே ? நீ கெட்டுப்போவாய்.
கவிநயம் :
இடுவோர் - இரப்போர்க்குப் பொருள் இடுவோர் ( தானம் தரும் கொடை வள்ளல் )
இரவோர் - பொருள் இரந்து (யாசித்து) வாழ்வோர்
நமன் - எமன்
கெடுவாய், நமனே! கெடுவாய் - படுபாவி! - எமனே இத்தகைய செயலைச் செய்த பாவி நீ கெடுவாய் ( உனக்குத் தீமையே விளையும் என்று மனம் நொந்து ஆற்றாமையால் எமனை நிந்தித்தனர் )
கற்பகப்பூங்கா வெட்டலாமோ கரிக்கு?
" மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் " என்று வள்ளுவர் கூறுவது போல் , உயிர் வாழ்ந்தும் பயனிலா மக்கள் உள்ளனர் . இத்தகையோரைப் பயனிலாக் காட்டு மரங்களுக்கு ஒப்பாகவும் , அம்மரங்களுள் அனைவர்க்கும் பயன் தரும் கற்பக மரத்தை , வள்ளல் கூவத்து நாரணனுக்கு ஒப்பாகவும் கொள்ள வேண்டும் .
மரத்தை வெட்டுவது உயிரைப் பறிப்பதற்கு ஒப்பாகும்
கற்பகம் - ( வேறு பெயர்கள் கற்பகத்தரு, கல்ப தரு,கல்பக விருட்சம் ) உயர்ந்த மணம் கொண்ட சந்தன மரத்தையும் இது குறிக்கும் .
இத்தகைய மாமனிதர்கள் இறந்தாலும் , இறவாப்புகழ் பெற்று விளங்குகின்றனர்.
Ref :
Karnan - Tamil movie
about Koovathu Naranan - Tamil VU
Karnan movie - wiki
Karnan - wiki
ninaivu blog
pavalamalai - blog
Opilaamani pulavar songs - song 9 - wiki
Irattai Pulavar - wiki
Karapagam - wiki
தமிழ் அகராதி - வர்த்தமானன் பதிப்பகம்
நம் அன்பிற்குரியவர்களை நாம் இழக்கும் போது நம் மனம் சொல்லொணாத் துயர் அடைகிறது. மனித வாழ்நாள் என்றோ ஓர் நாள் முடிவடையும் என்ற உண்மையை அறிந்த போதிலும் , நம் மனம் அத்தருணத்தில் அதை ஏற்க மறுக்கிறது.
" மனக்கவலை மாற்றலரிது" என்பது போல் , அவர்களுடனான நம் நினைவுகள் , மீண்டும் மீண்டும் ஓர் இனம் புரியா உணர்ச்சியில் நம்மை ஆழ்த்துகின்றன. காலப்போக்கில் அவை மறைந்தாலும் , அவ்வப்போது ஏதாவது நிகழ்வுகள், காட்சிகள் போன்றவை மூலம் வெளிப்படுகின்றன.
இந்தப் பிரிவின் வலிதான் எவ்வளவு கொடியது? நமக்கு வேண்டப்பட்டவர் தான் என்றில்லை. அது நாம் அறியாத ஒருவராய் இருப்பினும் கூட , இந்தப் பிரிவைக் கேட்க நேர்ந்தால்,இரங்கல் தெரிவிப்பதும் , துக்கம் விசாரிப்பதும் , இறந்தவர் வீட்டில், அவர் உடலுக்கு மலர் மாலை இடுதலும் , மௌன அஞ்சலி செலுத்துவதும் நம் நாட்டு மரபாக உள்ளது.
நம் புராணங்களிலும் ,இலக்கியங்களிலும் கூட இவ்வலியை உணர முடிகிறது. மகாபாரதத்தில் கர்ணன் இறந்த போது , அவன் தாய் அழுகிறாள் . அருகே மற்றொரு பெண் அழுகிறாள். அவளைப் பார்த்து " அம்மா, நான் கர்ணனின் தாய். அவன் பிரிவைத் தாங்காது அழுகிறேன் . நீ யார் , ஏன் அழுகிறாய் ? " என்று வினவினாள். அப்போது அவள் கூறினாள் , " நான் தர்மதேவதை (அறக்கடவுள்) எனக்கென்று , இப்பூவுலகில் ஒரே ஒரு மகனாகக் கர்ணன் இருந்தான் அவனும் இறந்துவிட்டான் . ஆதலால் அழுகிறேன்" . கொடுத்தே (தானம் தந்த கொடை வள்ளல்) சிவந்த கைகள் அல்லவா கர்ணனின் கைகள் ? இனி கர்ணன் போல் ஒருவனைக் காணத்தான் இயலுமோ?
தற்போதும் , தலைவர்கள் , பிரிவுகளுக்கு இரங்கல் செய்தி தெரிவிப்பதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம் . அக்காலத்தில் , புலவர்கள் தம் வலியைப் பாக்கள் மூலம் வெளிப்படுத்தினர் . அதன் பெயர் இரங்கற்பா . இப்போது ஓர் பாடலைக் காண்போம் .
கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். புலவர் மக்களைப் பெரிதும் ஆதரித்தவர் . அவர் புகழைச் சொல்லும் ஒரு பாடல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) நூலில் இடம் பெற்றுள்ளது. அதற்கான குறிப்பைக் கீழே தந்துள்ளேன் (Refer link below). அவர் இறந்த துக்கத்தைத் தாளாமல், இரட்டைப்புலவர்கள் ( ஒருவர் பார்வை இழந்தவர், மற்றொருவர் முடவர் ) இயற்றிய பாடல்.
இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?
விளக்கம் :
இவ்வுலகில் வள்ளல்கள் மிகச்சிலரே . ஆனால் , பொருள் வேண்டும் (யாசிக்கும்) மக்களோ மிக அதிகம் . இவ்வாறிருக்கையில், வள்ளலாகிய நாரணன் உயிரைப் பறித்து விட்டாயே . எமனே, உனக்கு எரிபொருள் ( கரி) வேண்டும் என்பதற்காகக் காட்டில் வீண் மரங்கள் எவ்வளவோ உள்ளன. அதை விடுத்துக் கேட்டவையல்லாம் தரும் கற்பக மரத்தை வெட்டிவிட்டாயே ? நீ கெட்டுப்போவாய்.
கவிநயம் :
இடுவோர் - இரப்போர்க்குப் பொருள் இடுவோர் ( தானம் தரும் கொடை வள்ளல் )
இரவோர் - பொருள் இரந்து (யாசித்து) வாழ்வோர்
நமன் - எமன்
கெடுவாய், நமனே! கெடுவாய் - படுபாவி! - எமனே இத்தகைய செயலைச் செய்த பாவி நீ கெடுவாய் ( உனக்குத் தீமையே விளையும் என்று மனம் நொந்து ஆற்றாமையால் எமனை நிந்தித்தனர் )
கற்பகப்பூங்கா வெட்டலாமோ கரிக்கு?
" மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் " என்று வள்ளுவர் கூறுவது போல் , உயிர் வாழ்ந்தும் பயனிலா மக்கள் உள்ளனர் . இத்தகையோரைப் பயனிலாக் காட்டு மரங்களுக்கு ஒப்பாகவும் , அம்மரங்களுள் அனைவர்க்கும் பயன் தரும் கற்பக மரத்தை , வள்ளல் கூவத்து நாரணனுக்கு ஒப்பாகவும் கொள்ள வேண்டும் .
மரத்தை வெட்டுவது உயிரைப் பறிப்பதற்கு ஒப்பாகும்
கற்பகம் - ( வேறு பெயர்கள் கற்பகத்தரு, கல்ப தரு,கல்பக விருட்சம் ) உயர்ந்த மணம் கொண்ட சந்தன மரத்தையும் இது குறிக்கும் .
இத்தகைய மாமனிதர்கள் இறந்தாலும் , இறவாப்புகழ் பெற்று விளங்குகின்றனர்.
Ref :
Karnan - Tamil movie
about Koovathu Naranan - Tamil VU
Karnan movie - wiki
Karnan - wiki
ninaivu blog
pavalamalai - blog
Opilaamani pulavar songs - song 9 - wiki
Irattai Pulavar - wiki
Karapagam - wiki
தமிழ் அகராதி - வர்த்தமானன் பதிப்பகம்
Nice article with a very good reading experience. Reference to Karnan Movie in reference was a pleasant surprise.
ReplyDeleteKeep up your good work.
Malarkodi
Informative.
ReplyDeleteThanks, Stella Mary
Initial few lines made me sentimental.
ReplyDeleteGood article.
Wishes,
R.Bhavani
Written passionately. Well done, Madam!
ReplyDeleteRegaeds,
D.Nithila