நளவெண்பாவில், மேலும் சில இனிமையான பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்திய மண் வீரப்புகழ் நிரம்பியது. இங்கே தோன்றிய மக்களும் அப்படித்தான். நம் பண்டைக் காலத்திலிருந்தே பெண்களுக்கென்று தனி இடம் உண்டு. வீரம், பண்பு, கல்வி, தொழில், ஆட்சி என பல பரிமாணங்களில் (multi dimensional, multi faceted, versatile) தனித்தன்மை உள்ளவர்களாகவும், குலவிளக்காகவும், தெய்வத்தன்மை கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்ததை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
இதை நான் பெருமையுடனும் , மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஒரு பெண்ணாகப் பதிவு செய்கிறேன்.பெண்ணின் சிறப்பைப் பண்பு, திறமை ஆகிய இருவகையிலும், இங்கே காண முடிகிறது.இன்றைக்கு வேலைக்கும் சென்று, வீட்டையும் கவனித்து வரும் பெண்களே அதிகம். இவர்கள் எப்போதாவது, தங்கள் ஆற்றலை உணராது, சோர்வாக ( மனச்சோர்வு) இருப்பின் , இப்பாடலை நினைவுகூறுங்கள்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
அன்றைக்கு அரசாட்சிக்கு உறுதுணையாய் அமைச்சர்கள் இருந்தனர். தக்க நேரத்தில், மன்னருக்கு அறிவுரை கூறுவோர் இவர்களே. நான்கு விதப் படைகள், வாள், வேல் போன்ற கருவிகள் , முரசு, செங்கோல், வெண்கொற்றக்குடை ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இவை யாவும் , இருப்பினும், அவர்களின் பண்பும் அறிவுமே நல்லாட்சிக்கு முக்கியமானதாக இருந்து.இதைக் கீழ் வரும் பாடல் கூறுகிறது.
தமயந்தியின் ஆட்சி - நளவெண்பா - பாடல் 31
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழே
ஆளுமே பெண்மையரசு
தமயந்தியின் நான்கு குணங்களே (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு), நான்கு படைகளாகவும்(குதிரை, யானை, தேர்,காலாள்), அவளின் புலன்களே நல்ல அமைச்சர்களாகவும், அவளின் சிலம்பே முரசு போலவும், அவள் கண்களே வாள் போல் ஒளி, கூர்மை உள்ளதாகவும் , அவள் முகமே நிலவு போலவும் இருக்கின்றன. இவ்வாறு வெண்கொற்றக்குடைக் கீழ் நீதி வழுவாது தமயந்தி ஆட்சி செய்தாள்.
இவ்வாறு , ஒரு பெண் மிகச்சிறப்பாய் ஆட்சி செய்தது நமக்கு ஒரு முன் உதாரணம். பாரதி கண்ட புதுமைப்பெண் செய்வதெல்லாம் உண்மையில், புதியவை அல்ல. ஆண்டாண்டு காலமாய், பண்பும் திறமையும் மரபணுக்களிலேயே ஊறி வந்தவைகள்தாம். இருப்பினும் , அவை காலப்போக்கில் தொலைந்ததால், அவற்றை மீட்டெடுக்கிறோம்.
இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.
பின்குறிப்பு/Note :
Example - Actual object
உவமை - உவமேயம் - ( Simile)
நாற்படை - நான்கு குணங்கள்
அமைச்சர் - ஐம்புலன்கள்
முரசு - சிலம்பு
Reference :
Thamayanthi - Dinamani article
Thamayanthi rule - Tamil VU
Thamayanthi rule - Tamil VU - page 2
4 padaigal - wiki
4 gunangal - tamilthottam blog
Uvamai - wiki
Uvameyam - wiki
இதை நான் பெருமையுடனும் , மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஒரு பெண்ணாகப் பதிவு செய்கிறேன்.பெண்ணின் சிறப்பைப் பண்பு, திறமை ஆகிய இருவகையிலும், இங்கே காண முடிகிறது.இன்றைக்கு வேலைக்கும் சென்று, வீட்டையும் கவனித்து வரும் பெண்களே அதிகம். இவர்கள் எப்போதாவது, தங்கள் ஆற்றலை உணராது, சோர்வாக ( மனச்சோர்வு) இருப்பின் , இப்பாடலை நினைவுகூறுங்கள்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
அன்றைக்கு அரசாட்சிக்கு உறுதுணையாய் அமைச்சர்கள் இருந்தனர். தக்க நேரத்தில், மன்னருக்கு அறிவுரை கூறுவோர் இவர்களே. நான்கு விதப் படைகள், வாள், வேல் போன்ற கருவிகள் , முரசு, செங்கோல், வெண்கொற்றக்குடை ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இவை யாவும் , இருப்பினும், அவர்களின் பண்பும் அறிவுமே நல்லாட்சிக்கு முக்கியமானதாக இருந்து.இதைக் கீழ் வரும் பாடல் கூறுகிறது.
தமயந்தியின் ஆட்சி - நளவெண்பா - பாடல் 31
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழே
ஆளுமே பெண்மையரசு
தமயந்தியின் நான்கு குணங்களே (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு), நான்கு படைகளாகவும்(குதிரை, யானை, தேர்,காலாள்), அவளின் புலன்களே நல்ல அமைச்சர்களாகவும், அவளின் சிலம்பே முரசு போலவும், அவள் கண்களே வாள் போல் ஒளி, கூர்மை உள்ளதாகவும் , அவள் முகமே நிலவு போலவும் இருக்கின்றன. இவ்வாறு வெண்கொற்றக்குடைக் கீழ் நீதி வழுவாது தமயந்தி ஆட்சி செய்தாள்.
இவ்வாறு , ஒரு பெண் மிகச்சிறப்பாய் ஆட்சி செய்தது நமக்கு ஒரு முன் உதாரணம். பாரதி கண்ட புதுமைப்பெண் செய்வதெல்லாம் உண்மையில், புதியவை அல்ல. ஆண்டாண்டு காலமாய், பண்பும் திறமையும் மரபணுக்களிலேயே ஊறி வந்தவைகள்தாம். இருப்பினும் , அவை காலப்போக்கில் தொலைந்ததால், அவற்றை மீட்டெடுக்கிறோம்.
இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.
பின்குறிப்பு/Note :
Example - Actual object
உவமை - உவமேயம் - ( Simile)
நாற்படை - நான்கு குணங்கள்
அமைச்சர் - ஐம்புலன்கள்
முரசு - சிலம்பு
Reference :
Thamayanthi - Dinamani article
Thamayanthi rule - Tamil VU
Thamayanthi rule - Tamil VU - page 2
4 padaigal - wiki
4 gunangal - tamilthottam blog
Uvamai - wiki
Uvameyam - wiki
Arupudamana katturai.
ReplyDeleteVaazhthukkal.
Selvaraghavan.
Nice article.
ReplyDeleteThe site theme is also fabulous.
Regards,
Malarkodi