தமிழுக்கென்று ஒரு தனிச்சிறப்பும் தொன்மையும் உள்ளது. ஆனால் , அது எந்த அளவு இளம் தலைமுறையைச் சென்றடைந்துள்ளது என்பது சந்தேகம்தான். தமிழில் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய எண்ணற்ற படைப்புகள் உள்ளன. அவற்றில் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை பொதிந்த படைப்புகளை அனைவரும் அனுபவித்து மகிழ வேண்டும் என்ற ஆர்வத்தில் இதை இங்கே பதிவு செய்கிறேன்.
இரட்டுறமொழிதல் என்பது, இரண்டு பொருள்பட மொழிதல். அதாவது ஒரே பாடல் இரு பொருள் .இதைச் சிலேடை என்றும் கூறுவர். இந்த இரட்டுறமொழிதலில் வல்லவர் கவி காளமேகம். இவரது இயற்பெயர் வரதன். அம்பிகையின் அருள் பெற்றவர். விரைந்து மழை பொழியும் கருமேகம் போல் , இவர் விரைந்து கவி பாட வல்லவர் என்பதால் "காளமேகம்" என்று பெயர் பெற்றார். இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். கீழ்வரும் பாடல் அவர் புலமைக்கு ஓர் சான்று.
ஒரு முறை கவி காளமேகம் சிதம்பரம் சென்றிருந்தார் . களைப்பு மிகுதியில் இருந்த அவரை அவ்வூர் மக்கள் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட அவர் ,
"எருக்கு முளைத்த தில்லை
இங்கு ஈசன் இருந்ததில்லை"
என்று பாடிவிட்டார். இதன் பொருள், இந்த தில்லை ( சிதம்பரம் ) தலத்தில் எருக்கு முளைக்கும் (வறட்சி ஏற்படும்). இங்கு ஈசன் இருந்தில்லை என்பதாகும்.
விவரம் அறிந்த ஊர் மக்கள் கவியிடம் சென்று , ஐயா இவ்வாறு பாடிவிட்டீர்களே என்று வருந்திய போது , அதற்குப் புலவர் நான் இவ்வாறு அல்லவா பாடினேன் என்று பின்வரும் விளக்கத்தை அளித்தார்.
"எருக்கு முளைத்ததில்லை
இங்கு ஈசன் இருந்த தில்லை"
அதாவது, இது ஈசன் உறையும் திருத்தலம். இறைவன் அருளால் என்றும் வளமாய் இருக்கும். ஆதலால் இங்கு எருக்கு முளைத்ததில்லை என்றார்.
Reference :
Kalamegapulavar article - Dinamalar
Nataraja Deekshidhar - Blog
Kaalamegam - Wiki
Kalamega Pulavar - Wiki
இரட்டுறமொழிதல் என்பது, இரண்டு பொருள்பட மொழிதல். அதாவது ஒரே பாடல் இரு பொருள் .இதைச் சிலேடை என்றும் கூறுவர். இந்த இரட்டுறமொழிதலில் வல்லவர் கவி காளமேகம். இவரது இயற்பெயர் வரதன். அம்பிகையின் அருள் பெற்றவர். விரைந்து மழை பொழியும் கருமேகம் போல் , இவர் விரைந்து கவி பாட வல்லவர் என்பதால் "காளமேகம்" என்று பெயர் பெற்றார். இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். கீழ்வரும் பாடல் அவர் புலமைக்கு ஓர் சான்று.
ஒரு முறை கவி காளமேகம் சிதம்பரம் சென்றிருந்தார் . களைப்பு மிகுதியில் இருந்த அவரை அவ்வூர் மக்கள் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட அவர் ,
"எருக்கு முளைத்த தில்லை
இங்கு ஈசன் இருந்ததில்லை"
என்று பாடிவிட்டார். இதன் பொருள், இந்த தில்லை ( சிதம்பரம் ) தலத்தில் எருக்கு முளைக்கும் (வறட்சி ஏற்படும்). இங்கு ஈசன் இருந்தில்லை என்பதாகும்.
விவரம் அறிந்த ஊர் மக்கள் கவியிடம் சென்று , ஐயா இவ்வாறு பாடிவிட்டீர்களே என்று வருந்திய போது , அதற்குப் புலவர் நான் இவ்வாறு அல்லவா பாடினேன் என்று பின்வரும் விளக்கத்தை அளித்தார்.
"எருக்கு முளைத்ததில்லை
இங்கு ஈசன் இருந்த தில்லை"
அதாவது, இது ஈசன் உறையும் திருத்தலம். இறைவன் அருளால் என்றும் வளமாய் இருக்கும். ஆதலால் இங்கு எருக்கு முளைத்ததில்லை என்றார்.
Reference :
Kalamegapulavar article - Dinamalar
Nataraja Deekshidhar - Blog
Kaalamegam - Wiki
Kalamega Pulavar - Wiki
Nice wrtiteup. Do share more Ezhilarasan.
ReplyDeleteSanthakavi thamizhalaganar about the author
ReplyDelete