நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகுதான் . நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றிய நம் மதிப்பீடுகளும் அளவுகோல்களும் நிறைய உள்ளன. அதுவும் நம் ஆளுமையை ( personality ) வெளிப்படுத்தும் , ஓர் கருவியாகவே நினைக்கிறோம். ஆங்கிலக் cream களிலிருந்து, ஆயுர்வேதா வரை பல்வேறு பொருட்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரைப் பயன்படுத்த இன்று அங்காடிகளில் கிடைக்கும். விலை கொடுத்து வாங்கும் இவையா அழகு ?. விலைமதிப்பற்ற நம் அழகு எங்கே ?
அழகு என்பது பல்வகைப்பட்டது. ஐந்து நாட்களின் சிகப்பழகுடன் மட்டுமே அது நின்றுவிடவில்லை. நிறம், தோற்றம் என்று வரையறைகள் அழகிற்கு இல்லை. நீங்கள் மறுமுறை உங்கள் அழகைக் கூட்ட நினைக்கும்போது, அல்லது நீங்கள் உங்கள் மனதளவில் யாருடனாவது தங்களை ஒப்பிட்டு நாம் அவ்வளவு அழகாக இல்லை என்று நினைத்தால், உங்கள் அளவுகோலை மாற்றுங்கள். உங்கள் குறிப்புப்புள்ளியை ( reference point ) மாற்றுங்கள் .
நம் இலக்கியம் சொல்வதை நினைவுகூறுங்கள் . இது ஆண்கள் ,பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் . உங்களிடம் யாரேனும் அழகுக் குறிப்பு கேட்டால், இதை மறவாமல் பகிருங்கள் . உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் .
நாலடியார் - பாடல் 131
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு
பொருள் :
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல -
குஞ்சி என்பது ஆண் தலைமுடி ஆகும் .அந்தக் குடுமியின் அழகும் (அந்தக் காலத்தில் ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது ), முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதினால் ஏற்படும் அழகும் அழகல்ல. ஏன் இவை அழகல்ல என்று இங்கே நாம் காண வேண்டும். நாம் அறிவியலில் relative measurements படித்திருப்போம் . ஒன்றை அளவிடும்போது, அது சார்ந்த மற்றொன்றை ஒப்பிடுகையில் , அதில் எது சிறந்தது அல்லது உயர்வானது என்பது புலப்படும் . இங்கே கல்வியினால் நாம் பெறும் அறநெறி தவறாத வாழ்க்கையை ஏனைய பொருட்கள் தரும் தோற்ற அழகோடு ஒப்பிடும்போது, அவை மிக மிக அற்பமானவை . ஏனெனில் நாம் வாழ்வில் வளர்ச்சி பெற கல்வியும் அறமுமே உதவுகின்றன.
நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு -
நாம் உண்மை நெறிக்கு ஏற்ப நடுவுநிலைமையுடன் ( அறம் தவறாது ) வாழ்கிறோம் என்ற பெருமிதமும் , அப்படி வாழ்வதற்கான நெறிகளைக் கற்றுத்தந்த கல்வியினால் நாம் பெறும் அழகே உண்மையான அழகாகும்.
Ref :
Naaladiyar - wiki
aga azhagum muga azhagum - tamil hindu
Naaladiar song 131 - Tamil VU
poopoova - blog
Kunji - wiki
அழகு என்பது பல்வகைப்பட்டது. ஐந்து நாட்களின் சிகப்பழகுடன் மட்டுமே அது நின்றுவிடவில்லை. நிறம், தோற்றம் என்று வரையறைகள் அழகிற்கு இல்லை. நீங்கள் மறுமுறை உங்கள் அழகைக் கூட்ட நினைக்கும்போது, அல்லது நீங்கள் உங்கள் மனதளவில் யாருடனாவது தங்களை ஒப்பிட்டு நாம் அவ்வளவு அழகாக இல்லை என்று நினைத்தால், உங்கள் அளவுகோலை மாற்றுங்கள். உங்கள் குறிப்புப்புள்ளியை ( reference point ) மாற்றுங்கள் .
நம் இலக்கியம் சொல்வதை நினைவுகூறுங்கள் . இது ஆண்கள் ,பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் . உங்களிடம் யாரேனும் அழகுக் குறிப்பு கேட்டால், இதை மறவாமல் பகிருங்கள் . உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் .
நாலடியார் - பாடல் 131
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு
பொருள் :
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல -
குஞ்சி என்பது ஆண் தலைமுடி ஆகும் .அந்தக் குடுமியின் அழகும் (அந்தக் காலத்தில் ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது ), முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதினால் ஏற்படும் அழகும் அழகல்ல. ஏன் இவை அழகல்ல என்று இங்கே நாம் காண வேண்டும். நாம் அறிவியலில் relative measurements படித்திருப்போம் . ஒன்றை அளவிடும்போது, அது சார்ந்த மற்றொன்றை ஒப்பிடுகையில் , அதில் எது சிறந்தது அல்லது உயர்வானது என்பது புலப்படும் . இங்கே கல்வியினால் நாம் பெறும் அறநெறி தவறாத வாழ்க்கையை ஏனைய பொருட்கள் தரும் தோற்ற அழகோடு ஒப்பிடும்போது, அவை மிக மிக அற்பமானவை . ஏனெனில் நாம் வாழ்வில் வளர்ச்சி பெற கல்வியும் அறமுமே உதவுகின்றன.
நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு -
நாம் உண்மை நெறிக்கு ஏற்ப நடுவுநிலைமையுடன் ( அறம் தவறாது ) வாழ்கிறோம் என்ற பெருமிதமும் , அப்படி வாழ்வதற்கான நெறிகளைக் கற்றுத்தந்த கல்வியினால் நாம் பெறும் அழகே உண்மையான அழகாகும்.
Ref :
Naaladiyar - wiki
aga azhagum muga azhagum - tamil hindu
Naaladiar song 131 - Tamil VU
poopoova - blog
Kunji - wiki
nice article.
ReplyDeleteEzhil
Your blog is coming out very well. Posts looks now to be in order.
ReplyDeleteFont-ai innum konjam nalla samam paduthi membaduthalam. Ellam postslayum ore vidhamana layout irundha innum nalla irukum.
God bless you.
Wishes,
R. Bhavani.
Beautifully wrote it.
ReplyDeleteNice try. Stella Mary