Thursday, 19 November 2015

என் அன்னைத்தமிழுக்காக

அனைவருக்கும் அன்பான வணக்கம்!

இதை என் முதல் பக்கமாகக் கருதிப் படிக்கவும் . என்னைச் சிறு வயது முதல் தமிழின் மீது ஆர்வமும் பற்றும் கொண்டு வளர்த்த என் தாத்தாவிற்கு ( அமரர் திரு. இ.வெ. வரதராஜன் ) இதை மனதார உரித்தாக்குகிறேன் .

நான் தமிழில் முதல் முறையாக எழுதுகிறேன் . என்னால், இயன்ற வரையில், தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறேன் . இருப்பினும் அனைவருக்கும் செந்தமிழ் சென்றடையும் நோக்குடன், ஆங்காங்கே சில ஆங்கிலச் சொற்களும் பயன்படுத்தப்போகிறேன். இவற்றின் சொல்லில், பொருளில், இலக்கணத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தாலும், அவற்றையும் தாண்டித் தமிழின் பெருமை வெளிப்பட்டால் , அதுவே போதும்.

இந்தப் பதிவுகள் தொடர்பான கருத்துகளை ( comments,critics all inclusive ) , comments மூலம் சொல்லுங்கள். அவற்றை வரவேற்கிறேன். மேலும் ,வரும் காலங்களில் இந்தப் பதிவுகள் தொடர்பான ஒலி நாடாக்கள் மற்றும் உதவி ஆவணங்கள் ( தமிழில் தெளிவான உச்சரிப்புடன் படித்துப் புரிந்து கொள்ள மேலும் உதவும் - audio files helper files , ppt, pdf etc )ஆகியவற்றையும் இயற்றி, இங்கு பகிர எண்ணியுள்ளேன்.

நோக்கம்

தமிழின் பெருமையை, தனிச்சிறப்பை வார்த்தைகளில் கூற முடியவில்லை. தமிழும் அதன் தனிச்சிறப்பும் இளையதலைமுறையைச் சென்றடைய வேண்டும் .

" சுடர் விளக்காயினும் , தூண்டுகோல் வேண்டும் "

என்பதற்கு ஏற்ப என் வலைப்பூ (Blog) தமிழார்வம் இளைஞர்களிடம் பெருக ஓர் தூண்டுகோலாய் அமைந்தால் , மகிழ்ச்சி அடைவேன்.

இங்கு நான் தமிழார்வம் என்று குறிப்பிடுவது, தமிழின் ஆணிவேறாய்த் திகழும் , இலக்கியங்கள் அவற்றின் சொற்சுவை, பொருட்சுவை, அதில் கூறப்படும் வாழ்வியல் நெறிகள் , மறைபொருளாய் இருக்கும் அறிவியல், வரலாற்று உண்மைகள் பற்றித் தேடி அறியும் ஆர்வமாகும்.

எது இல்லை நம் தமிழில்? பல்லாயிரக்கணக்கான நூல்கள், நிகழ்ச்சிகள், வலைப்பதிவுகள்,இதழ்கள் அனைத்தும் இருப்பினும் மக்களிடம் அவை அதிகம் சென்றடைவதில்லை. ஏன் ?

ஓர் சிறிய உதாரணம் சொல்கிறேன் . தீபாவளியன்று திரைப்படங்களும் , திண்பண்டங்களும் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. அவ்விழாவின் முக்கியத்துவம் சொல்லும் பல பதிவுகள் இருப்பினும் , ( TV for example - தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அவை இடம்பெறும் கால அளவு மிகச் சில நேரங்களே.அதுவும் , அவை விடியற்காலையே முடிந்து விடும் .

தீபாவளி என்ற சொல்லிலேயே அதன் பொருள் உள்ளது.தீப + ஆவளி. அதாவது, தீபங்களின் வரிசை. இதை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்?

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை

இன்றைய மிகவிரைவான உலகில், நலவாழ்வு, மேலாண்மை,தொழில்நுட்பம் என எவ்வளவோ பேசி, தேடி, அலசி, ஆராயும் நாம் தமிழுக்கென்று ஓர் விநாடி ஒதுக்குவோம். இங்கு எண்ணற்ற மொழி, கலைகளின் அருமை அறிந்தவர்களைக் காண்கிறேன் ஆனால் , என் பார்வையில் இவை அனைத்தும் வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் காட்சியாகவே தெரிகிறது.

இதுவரை , தமிழுக்கானப் பதிவுகளை வலைதளங்களிலும் மற்ற ஊடகங்களிலும் கொண்டுச்சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி.மேலும் , இவைத் தொடர, சிறக்க, அவற்றின் நோக்கம் ஈடேறத் தமிழன்னையை வணங்குகிறேன்

2 comments:

  1. So far the best post among all in terms of connecting with readers and sharing your thoughts so clearly.

    May you achieve what you want.

    Regards,
    D. Nithila

    ReplyDelete
  2. Your English introduction was good. Tamil version was enchanting. You have got talent for writing in Tamil.

    Keep up your good work.

    Stella Mary.

    ReplyDelete